சென்னை போலீஸ் கமிஷனர் திடீர் மாற்றம்!

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் டாக்டர். ஏ.கே.விஸ்வநாதன் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பு வகித்த சென்னை கூடுதல் டிஜிபி ஆக விஸ்வநாதன் மாற்றப்பட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட தொடக்க நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனை மற்றும் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணியில் திறம்பட பணியாற்றியதற்கு பாராட்டு பெற்றவர் மகேஷ்குமார் அகர்வால். வட சென்னையின் கொரோனா கட்டுப்பாட்டு சிறப்பு
 

சென்னை போலீஸ் கமிஷனர் திடீர் மாற்றம்!சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் டாக்டர். ஏ.கே.விஸ்வநாதன் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுள்ளார்.  முன்னதாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பு வகித்த சென்னை கூடுதல் டிஜிபி ஆக விஸ்வநாதன் மாற்றப்பட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட தொடக்க நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனை மற்றும் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணியில்  திறம்பட பணியாற்றியதற்கு பாராட்டு பெற்றவர் மகேஷ்குமார் அகர்வால். வட சென்னையின் கொரோனா கட்டுப்பாட்டு சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி இருந்தார்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான ஏடிஎஸ்பி, டிஎஸ்பி இருவருக்கும் இடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை காவல்துறையின் இந்த அதிரடி மாற்றம் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது,

A1TamilNews.com

From around the web