சென்னையில் பறக்கும் ரயிலுடன் இணைகிறது மெட்ரோ! பொதுமக்கள் வரவேற்பு!

சென்னையில் பறக்கும் ரயிலுடன் இணைகிறது மெட்ரோ! பொதுமக்கள் வரவேற்பு! சென்னையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், கிண்டியை போல், பரங்கிமலையும் முக்கிய போக்கு வரத்து சந்திப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது.மெட்ரோ ரயிலும், பறக்கும் ரயில் சேவையும் விரைவில் இணைக்கப்பட இருக்கிறது. எனவே, தெற்கு ரயில்வே பரங்கிமலை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறது. இருக்கைகள் அமைத்தல், நடைமேடைகள் விரிவாக்கம், தேவையற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றம் என அனைத்து பணிகளும் விரைந்து முடிக்கப்படுகிறது. இதேபோல், ஆலந்தூரில் இருந்து, மெட்ரோ ரயில் நிலையத்துக்கு
 

சென்னையில் பறக்கும் ரயிலுடன் இணைகிறது மெட்ரோ! பொதுமக்கள் வரவேற்பு!சென்னையில் பறக்கும் ரயிலுடன் இணைகிறது மெட்ரோ! பொதுமக்கள் வரவேற்பு!
சென்னையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், கிண்டியை போல், பரங்கிமலையும் முக்கிய போக்கு வரத்து சந்திப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது.மெட்ரோ ரயிலும், பறக்கும் ரயில் சேவையும் விரைவில் இணைக்கப்பட இருக்கிறது.

எனவே, தெற்கு ரயில்வே பரங்கிமலை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறது. இருக்கைகள் அமைத்தல், நடைமேடைகள் விரிவாக்கம், தேவையற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றம் என அனைத்து பணிகளும் விரைந்து முடிக்கப்படுகிறது.

இதேபோல், ஆலந்தூரில் இருந்து, மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்ல வசதியாக புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணியும் துரிதப்படுத்தப் படுகிறது.”சென்னையில் பரங்கிமலை ரயில் நிலையம் முக்கிய போக்குவரத்து சந்திப்பாக மாறி வருகிறது.

மின்சார ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ஆலந்தூரின் முக்கியமான சாலையும் இணைக்கப்படுவதால், மக்களின் வருகை அதிகரித்துள்ளது. பறக்கும் ரயில் நிலையமும் விரைவில் இணைய இருப்பதால், பொதுமக்களின் பயன்பாடு மேலும் பல மடங்கு அதிகரிக்கும்.

பரங்கிமலை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. ஆலந்தூர் சாலை – பரங்கிமலை ரயில் நிலையம் – மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ரூ.6 கோடி செலவில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. படிகளுடன் எஸ்கலேட்டர் வசதியும் அமைக்கப்படுகின்றன. இந்தப் பணிகள் அடுத்த 6 மாதங்களில் நிறைவடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

https://www.A1TamilNews.com

From around the web