தானியங்கி கைகழுவி குழாய்கள், தானியங்கி சானிடைசர் வெளியேற்றும் கருவி கண்டுபிடிப்பு!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மருத்துவமனைகள்,அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் இவற்றில் நுழைவாயிலில் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வது கட்டாயமாக்கபட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் கைகழுவும் தொட்டிகளில் உள்ள குழாய்கள் கைகளால் தொட்டு திருகி தண்ணீரை திறந்து விட்டு கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். . இந்த முறையில் குழாயை தொடுவதால் வைரஸ் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம். தற்போது
 

தானியங்கி கைகழுவி குழாய்கள், தானியங்கி சானிடைசர் வெளியேற்றும் கருவி கண்டுபிடிப்பு!மிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மருத்துவமனைகள்,அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் இவற்றில் நுழைவாயிலில் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வது கட்டாயமாக்கபட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் இருக்கும் கைகழுவும் தொட்டிகளில் உள்ள குழாய்கள் கைகளால் தொட்டு திருகி தண்ணீரை திறந்து விட்டு கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். . இந்த முறையில் குழாயை தொடுவதால் வைரஸ் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம்.

தற்போது சென்சார் மூலம் தானாகவே இயங்கக்கூடிய தானியங்கி கைகழுவ உதவும் அமைப்பு மற்றும் கிருமிநாசினிஃசோப்பு கரைசல் திரவம் வெளியேற்றும் கருவியை கோவை மத்திய வேளாண் பொறியியல் நிறுவன மண்டல மைய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

இதில் தண்ணீர் தொட்டியுடன் பேட்டரியால் இயங்கக்கூடிய பம்பு,வேககட்டுப்பாட்டு அமைப்பு, சென்சாரால் இயங்கக்கூடிய சோப்பு கரைசல் மற்றும் தண்ணீர் குழாய் ஆகிய பாகங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தண்ணீர் செலவு சிக்கனப்படுத்தப் படுவதுடன் கைகளால் குழாயை தொடாமலேயே கைகளை சுத்தம் செய்து கொள்ளலாம். இவ்வமைப்பின் விலை ரூ.10.000 ஆகும்.

கிருமிநாசினி கலன், பேட்டரியால் இயங்கக்கூடிய பம்பு, கிருமிநாசினி திரவம் வெளியேற்றும் குழாய் மற்றும் சென்சார் ஆகிய பாகங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் சானிடைசர் வெளியேற்றும் குழாய்க்கு அருகில் கைகளை கொண்டு செல்லும்பொழுது சென்சாரால் உணரப்பட்டு கிருமி நாசினி திரவம் தேவையான அளவு வெளியேற்றப்படுகிறது.

இந்தக் கருவி மூலம் கைகளால் தொடாமலேயே கிருமிநாசினி திரவத்தை கொண்டு கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள முடியும். இக்கருவியின் விலை ரூ.1000 ஆகும். அனைத்து அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

A1TamilNews.com

From around the web