பட்டப்படிப்புக்கு சான்றிதழ் காட்டுங்கள்.. அப்புறம் ஆவணங்கள் கேளுங்கள்! – மோடிக்கு அனுராக் காஷ்யப் சவால்!

பிரபல இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப், முதலில் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிடட்டும், பின்னர் பொதுமக்களிடம் ஆவணங்களைக் கேட்கலாம் என்று கூறியுள்ளார். குடியுரிமைச் சட்டம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து ட்விட்டர் மூலம் அனுராக் காஷ்யப் இந்தி மொழியில் கூறியுள்ளதாவது, “இன்று குடியுரிமைச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. முதலில் மோடியிடம் அவருடைய பிறப்புச் சான்றிதழ் கேளுங்கள். அவருடைய அப்பா, தாத்தாவின் பிறப்புச் சான்றிதழ்களையும் கேளுங்கள். அவர் படித்து முடித்த அரசியல் அறிவியல் பட்டப்படிப்பிற்கான சான்றிதழ் இந்தியா
 

பட்டப்படிப்புக்கு சான்றிதழ் காட்டுங்கள்.. அப்புறம் ஆவணங்கள் கேளுங்கள்! – மோடிக்கு அனுராக் காஷ்யப் சவால்!பிரபல இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப், முதலில் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிடட்டும், பின்னர் பொதுமக்களிடம் ஆவணங்களைக் கேட்கலாம் என்று கூறியுள்ளார்.

குடியுரிமைச் சட்டம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து  ட்விட்டர் மூலம் அனுராக் காஷ்யப் இந்தி மொழியில் கூறியுள்ளதாவது,

“இன்று குடியுரிமைச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. முதலில் மோடியிடம் அவருடைய பிறப்புச் சான்றிதழ் கேளுங்கள். அவருடைய அப்பா, தாத்தாவின் பிறப்புச் சான்றிதழ்களையும் கேளுங்கள். அவர் படித்து முடித்த அரசியல் அறிவியல் பட்டப்படிப்பிற்கான சான்றிதழ் இந்தியா முழுவதுக்கும் தெரியப்படுத்துமாறு கேளுங்கள். அதன் பிறகு ஆவணங்களைக் கேட்கச் சொல்லுங்கள்,” என்று  ட்வீட் செய்துள்ளார்.

பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் அனுராக் காஷ்யப், ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவான போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். ட்விட்டர் மூலம் தேசிய குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக கடுமையான கருத்துக்களை கூறி வருகிறார்.

http://www.A1TamilNews.com

 

From around the web