சிறையில் பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம்! கையும் களவுவாக சிக்கிய போலீஸ் அதிகாரி.. பின்னர் நடந்தது என்ன?

 

பாகிஸ்தான் சிறையில் உள்ள பெண் ஒருவரை நிர்வாணமாக நடனமாட வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் குவெட்டாவின் ஜின்னா நகரத்தில் ஒரு குழந்தையைக் கொன்றது தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் பாரி குல் என்ற பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் விசாரணை என்ற பெயரில் இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத் மற்றும் போலீசார் அந்த பெண்ணை மிரட்டி நிர்வாணமாக்கியதோடு மட்டுமல்லாமல் சிறையில் மற்றவர்கள் முன் நிர்வாணமாக நடனமாடவும் வற்புறுத்தியுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தை அவர்கள் வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இதையடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் பார் குல் தாரின் என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து இந்த புகார் குறித்து உடனடியாக விசாரணை அறிக்கை தருமாறு  உத்தரவிடப்பட்டது.
 
குறிப்பிட்ட விசாரணையில் ஷபானா இர்ஷத் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பெண்ணை நிர்வாணமாக்கி நடனமாட வைத்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத் உள்ளிட்ட 5 பெண் பொலிசாரை உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.