புதிய துணை அதிபரை தேர்ந்தெடுக்க திட்டம்..? ஜோ பைடன் மீது அதிருப்தியில் இருக்கும் கமலா ஹாரிஸ்!!

 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு அதிகாரிகளால் ஓரங்கட்டப்படுவதால், அவர் மீது துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு அதிகாரிகளால் ஓரங்கட்டப்படுவதால், ஜோ பைடன் மீது கமலா ஹாரிஸ் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமலா ஹாரிசுக்கு அமெரிக்க உச்சநீதமன்றம் பதவியை வழங்கிவிட்டு, புதிய துணை அதிபரை தேர்ந்தெடுக்க, ஜோ பைடன் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எல்லை பிரச்சினை தொடர்பான விவகாரத்தில், அவரது செயல்பாடு ஜோ பைடனுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், துணை அதிபரை விட, போக்குவரத்து அமைச்சராக உள்ள பீட் பட்டிகெக்கிற்கு, ஜோ பைடன் கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிபர்  தேர்தலில், கமலா ஹாரிசின் பிரச்சாரம், அமெரிக்க பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் மூலம், ஜோ பைடனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

2024 அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசுக்கு வாய்ப்பு  வழங்கப்படலாம், என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிபர் - துணை அதிபர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை இரு தரப்பிலும் மறுத்து உள்ளனர்.