விமானத்தில் போதையில் பயணிகளை தாக்கியவர் கைது.. வழியில் தரையிறக்கம்!

துசான்(யு.எஸ்): பறக்கும் விமானத்தில் போதையில் சக பயணியை தாக்கியதால் சவுத் வெஸ்ட் விமானம் வழியில் தரையிறக்கப்பட்டது. தாக்கியவர் கைது செய்யப்பட்டார். டல்லாஸிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்-க்கு சென்று கொண்டிருந்த சவுத் வெஸ்ட் விமானத்திலிருந்து, துசான் விமான நிலையத்திற்கு அவசரமாக தரையிறக்கக் கோரி தகவல் வந்துள்ளது. விமானத்தில் போதையில் இருக்கும் நபர் ஒருவர் சகபயணியை தாக்குகிறார் என்று காரணமும் கூறப்பட்டுள்ளது. உடனடியாக விமானநிலைய போலீசாருக்கும் தகவல் அனுப்பப் பட்டுவிட்டது. விமானம் துசானில் தரையிறங்கியதும் டேவிட் ப்ரோசெ என்ற 51 வயது நபர்
 

துசான்(யு.எஸ்): பறக்கும் விமானத்தில் போதையில் சக பயணியை தாக்கியதால் சவுத் வெஸ்ட் விமானம் வழியில் தரையிறக்கப்பட்டது. தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

டல்லாஸிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்-க்கு சென்று கொண்டிருந்த சவுத் வெஸ்ட் விமானத்திலிருந்து, துசான் விமான நிலையத்திற்கு அவசரமாக தரையிறக்கக் கோரி தகவல் வந்துள்ளது.

விமானத்தில் போதையில் இருக்கும் நபர் ஒருவர் சகபயணியை தாக்குகிறார் என்று காரணமும் கூறப்பட்டுள்ளது. உடனடியாக விமானநிலைய போலீசாருக்கும் தகவல் அனுப்பப் பட்டுவிட்டது.

விமானம் துசானில் தரையிறங்கியதும் டேவிட் ப்ரோசெ என்ற 51 வயது நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். போலீசார் கைது செய்து பிமா கவுண்டி சிறையில் அடைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள டேவிட் போதையில் இருப்பதாக தெரிய வந்த போதிலும் எந்த விதமான போதைப் பொருள் பயன்படுத்தினார் என்று தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே போதையில் இருப்பவர்களுக்கு விமானத்தில் ஆல்ஹகால் வழங்கப்படுவதில்லை என்றும் விமான நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. விமானத்தில் ஏறும் போதே போதையுடன் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சக பயணிகளை தாக்கியதால் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லவேண்டியவர் பிமா ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். விமானத்தின் மற்ற பயணிகள் சற்று தாமதமாக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றடைந்தார்கள்.