அமெரிக்காவில் நியூ ஆர்லியன்சில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; 5 பேருக்கு காயம்!!

 

அமெரிக்காவின் ஆர்லியன்சில் நடந்த திடீர் துப்பாக்கி சூட்டில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தின் தென்கிழக்கில் நியூ ஆர்லியன்ஸ் நகரம் அமைந்து உள்ளது. இந்நிலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவருக்கு சம்பவ பகுதியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்ற 4 பேர் உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.  அவர்கள் 5 பேரும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் காயம் அடையவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவரவில்லை.  இந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை.  போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.