அமெரிக்க விருது பெற்ற முதலமைச்சர்! கொரோனா காலத்தில் கிடைத்த விருது!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரப்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “அமெரிக்காவில் இலனாய் மாநிலத்தின் சிகாகோ நகரத்தில் தலைமையிடமாகக் கொண்டு ‘தி ரோட்டரி பவுண்டேஷன் ஆப் ரோட்டரி இண்டர்நேஷனல் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களை ‘பால் ஹாரீஸ் பெல்லோ“
 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரப்படுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
 
“அமெரிக்காவில் இலனாய் மாநிலத்தின் சிகாகோ நகரத்தில் தலைமையிடமாகக் கொண்டு ‘தி ரோட்டரி பவுண்டேஷன் ஆப் ரோட்டரி இண்டர்நேஷனல் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
 
இந்த அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களை ‘பால் ஹாரீஸ் பெல்லோ“ என்று அழைத்து கவுரவப்படுத்தி வருகிறது.
 
இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இதுபோன்ற சேவையை பாராட்டி அவரை ‘பால் ஹாரீஸ் பெல்லோ” என்று கவுரப்படுத்தி உள்ளது.
 
இந்தத் தகவலை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.