தன்னம்பிக்கை ஊட்டும் விராட் கோலியின் கடிதம்!

விராட் கோலி இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலி அவரது ட்விட்டர் பக்கத்தில், தன்னுடைய பயணம் மற்றும் வாழ்க்கை கற்றுதந்த பாடம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை கடிதமாக எழுதி பதிவிட்டுள்ளார். ஹாய் சிக்கு (Chikku) என கடிதத்தை ஆரம்பித்துள்ள அவர், வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என தெரியாமல் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறி செல்வதில் தான் சுவாரஸ்யம் இருப்பதாக
 

விராட் கோலி ‌இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிக‌ர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலி அவரது ட்விட்டர் பக்கத்தில், தன்னுடைய பயணம் மற்றும் வாழ்க்கை கற்றுதந்த பாடம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை கடிதமாக எழுதி பதிவிட்டுள்ளார். ஹாய் சிக்கு (Chikku) என கடிதத்தை ஆரம்பித்துள்ள அவர், வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என தெரியாமல் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறி செல்வதில் தான் சுவாரஸ்யம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் சவால்களும், அதிருப்திகளும் புதுப்புது பாடத்தை கற்றுக்கொடுக்கும் என தெரிவித்துள்ள அவர், சரியான நேரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

பலருக்கு உங்களை பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது…ஆனால் அதனை பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள் என குறிப்பிட்டுள்ள விராட், மனம் சொல்வதை கேளுங்கள் என்றும் கனவுகளை துரத்தி உங்களை உலகிற்கு வெளிகாட்டுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

https://www.A1TamilNews.com