அர்ஜுன் டெண்டுல்கருக்கு நாய் கடி... லக்னோ அணி வீடியோ வெளியிட்டு அறிவிப்பு!!
மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டரும், சிறந்த பேட்ஸ்மேனுமான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை நாய் கடித்துள்ளது.
16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல்லில் மும்பை அணியில் அறிமுகமான அர்ஜுன், தனது அணிக்காக நான்கு போட்டிகளில் பங்கேற்றார்.
அர்ஜுன் டெண்டுல்கர் இடது கையால் பந்து வீசுகிறார், இந்த கையின் விரல்களை நாய் கடித்துவிட்டது என்று கூறப்படுகிறது. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது பந்து வீச தகுதியற்றவர். இதனால் இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அவரால் விளையாட முடியாது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அதில், அர்ஜுன் டெண்டுல்கர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர்களான யுத்வீர் சிங் சரக் மற்றும் மொஹ்சின் கான் ஆகியோரை சந்திக்கிறார். அப்போது, தன்னை நாய் கடித்ததாக கூறி உள்ளார்.