செல்ஃபி அலர்ஜி… மீண்டும் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார்!
சிவக்குமாரின் முன் அனுமதியைப் பெறாமல், அவரது முகத்துக்கு நேரே அந்த நபர் செல்போனைக் கொண்டு வந்தார். அதை வேகமாக விலக்கிவிட்டு நடந்தார் சிவக்குமார். இதில் அவர் தவறேதும் இல்லை என்று அவரை அழைத்து வந்தவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த ஆண்டு மதுரையில் கடை திறப்பு விழாவிற்கு சென்றபோது செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவரின் செல்போனை சிவக்குமார் தட்டிவிட்டதால் சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்த நபருக்கு நடிகர் சிவக்குமார் புதிய செல்போன் வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
– வணக்கம் இந்தியா