பிரதமர் மோடியையே பின்னுக்குத் தள்ளி இணையத்தை வைரலாக்கி வரும் நேசமணி…! #Nesamani #ModiSarkar2
ஒரு சுத்தியல், ஒரே ஒரு சுத்தியல் படத்தைப் போட்டு அதற்கு யாரோ ஒரு பாகிஸ்தானி விளக்கம் கேட்பது போல நகைச்சுவையாக ஒரு மீம் பரவ, அது கடந்த இரு தினங்களாக சமூக வலைத் தளங்களை வைரலாக்கிவிட்டது. இன்று மோடி பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்வு தொடர்பான ஹேஷ்டேகைக் கூட அது பின்னுக்குத் தள்ளி இரண்டு நாட்களாக அகில இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
தமிழ் நாட்டுக்காரர்கள், தமிழர்கள் தவிர வேறு யாருக்கும் இந்த நேசமணி விவகாரம் அத்தனை சுலபத்தில் புரியாது. #Pray_For_Nesamani #Nesamani ஹேஷ்டேகுகளை மற்ற மாநிலத்தவர் ரொம்ப சீரியஸாகவே ட்விரட்டரிலும் பேஸ்புக்கிலும் பகிர்ந்து வருவதைப் பார்க்க முடிகிறது.
ட்ரம்ப் வருத்தம், இம்ரான்கான் விசாரிப்பு, நேசமணிக்காக உலகக் கோப்பையையே தள்ளி வைப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் அறிவிப்பு, உச்சகட்டமாக நேசமணிக்கு சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் பீலே வருகை வரை போய்விட்டது.
இன்னொருவர் #Nesamani பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியதாக ஒரு பதிவை வெளியிட அல்டிமேட் போங்க… எது நிஜம், எது கற்பனை என்றே கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு நேசமணி பதிவுகள் இணையத்தைத் திணறடித்துக் கொண்டுள்ளன.
விஜய்யை வைத்து படமெடுத்துக் கொண்டிருக்கும் அர்ச்சனா கல்பாத்தி என்ற தயாரிப்பாளர் இன்றகு வெளியிட்டுள்ள ட்விட் இது. அதாவது ‘விஜய்யின் 63வது படம் பற்றிப் பேச ஏற்ற நேரமில்லை இது. நேசமணிக்காக பிரார்த்தனைகள்’, என்று குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் வடிவேலு என்ற மகா கலைஞனின் பாதிப்பு.!
‘கோவாலு, கிச்சணமூர்த்தி எல்லாம் வாங்கடா… இந்த நேசமணிக்கு எண்ட் காரடே இல்லடா!’
நேசமணி மீம்கள்…
[ See image gallery at a1tamilnews.com]– வணக்கம் இந்தியா