ஆதிக்க சக்திகளின் கொடும் பற்கள் கோரத்தாண்டவம்… மு.க.ஸ்டாலின் ஆவேசம்! #JusticeForFathimaLatheef
சென்னை ஐஐடி மாணவி மரணம் தற்கொலை அல்ல என்று குற்றம் சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது,
“சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது! அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்!
குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும்.
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை என்பதையே பாத்திமாவின் மரணம் காட்டுகிறது!
இதுபோன்ற நிகழ்வுகள் திராவிட இயக்கம் எப்போதும் தேவை என்பதை தொடர்ந்து உணர்த்துகின்றன,” என்று மு.க.ஸ்டாலின் ஆவேசமாகக் கூறியுள்ளார்.