கார் விபத்தில் உயிரிழந்தவர்களில் 78% பேர் சீட் பெல்ட் அணியாதவர்கள்! எச்சரிக்கும் ரிப்போர்ட்…

தமிழகத்தில், கடந்தாண்டு நடைபெற்ற கார் விபத்துகளில் உயிரிழந்தோரில் 78 சதவீதம் பேர் சீட் பெல்ட் அணியாதவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சாலை விபத்து குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தில் கடந்தாண்டு 2 ஆயிரத்து 68 பேர் கார் விபத்துகளில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், ஆயிரத்து 614 பேர் சீட் பெல்ட் அணியாதவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீட் பெல்ட் அணிவததன் அவசியம் குறித்து விழிப்புணர்வு தமிழக மக்களிடையே அதிகளவில் ஏற்படாததே உயிரிழப்புகள் அதிகரிக்க
 

மிழகத்தில், கடந்தாண்டு நடைபெற்ற கார் விபத்துகளில் உயிரிழந்தோரில் 78 சதவீதம் பேர் சீட் பெல்ட் அணியாதவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

சாலை விபத்து குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தில் கடந்தாண்டு 2 ஆயிரத்து 68 பேர் கார் விபத்துகளில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், ஆயிரத்து 614 பேர் சீட் பெல்ட் அணியாதவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீட் பெல்ட் அணிவததன் அவசியம் குறித்து விழிப்புணர்வு தமிழக மக்களிடையே அதிகளவில் ஏற்படாததே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணமாகக் கூ‌றப்படுகிறது. கடந்தாண்டு மட்டும் சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக சுமார் ‌11புள்ளி 7 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன‌. காரில் பயணிக்கும் மூன்றில் ஒரு குழந்தை சீட் பெல்ட் அணியாமல் இருப்பதாகவும், அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக இருக்கைகளை பயன்படுத்தாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.A1TamilNews.com