செல்போனில் பேசியதை கண்டித்த தாய்மாமன்! தூக்குப்போட்டு தற்கொலை செய்த இளம்பெண்!!

செல்போனில் அடிக்கடிப் பேசிக்கொண்டிருப்பதாக தாய்மாமன் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னையை மடிப்பாக்கம் துரைராஜ் தெருவைச் சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி மதுமிதா. தம்பியுடன் தாய் மாமா சரவணன்வீட்டில் வளர்த்து வந்தார் மதுமிதா. மதுமிதா, எப்போதும் செல்போனிலேயே அதிகநேரம் பேசி வந்ததாகவும், இதனை சரவணன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. மதுமிதாவிடமிருந்து செல்போனை சரவணன் பறித்து வைத்து விட்டதாகவும் தெரிகிறது. தாய்மாமன் கண்டிப்பினால் மனம் உடைந்த மதுமிதா, தனது அறையில்
 
செல்போனில் அடிக்கடிப் பேசிக்கொண்டிருப்பதாக தாய்மாமன் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னையை மடிப்பாக்கம் துரைராஜ் தெருவைச் சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி மதுமிதா. தம்பியுடன் தாய் மாமா சரவணன்வீட்டில் வளர்த்து வந்தார் மதுமிதா.

 
மதுமிதா, எப்போதும் செல்போனிலேயே அதிகநேரம் பேசி வந்ததாகவும், இதனை சரவணன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. மதுமிதாவிடமிருந்து செல்போனை சரவணன் பறித்து வைத்து விட்டதாகவும் தெரிகிறது.
 
தாய்மாமன் கண்டிப்பினால் மனம் உடைந்த மதுமிதா, தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
செல்போனில் பேசும் விவகாரம் இளம்பெண்ணின் உயிரையே பறித்துள்ளது மடிப்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.