தற்கொலை செய்து கொண்ட தமிழக இளைஞர்! ஃபேஸ்புக்கில் லைவ்!!

தாராபுரம் சின்னரௌதன்பாலையத்தைச் சேர்ந்த 37 வயது ராம்குமார் என்பவர் முகநூலில் நேரடி ஒளிபரப்பில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை கடிதத்தில் தான் வாழ்க்கையினால் சலிப்படைந்ததாக எழுதியுள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து , வாடகை வீட்டில் தன் மனைவி , குழந்தையோடு வசித்துவந்துள்ளார். நேற்று அவர் மனைவி மற்றும் குழந்தை அவர்கள் தாத்தா வீட்டிற்கு சென்றனர். இரவு 1 மணி அளவில் குடித்துவிட்டு வந்து தனது முகநூலில் நேரடி ஒளிபரப்பில் தற்கொலை செய்வதாக கூறியுள்ளார்.
 

தாராபுரம் சின்னரௌதன்பாலையத்தைச் சேர்ந்த 37 வயது ராம்குமார் என்பவர் முகநூலில் நேரடி ஒளிபரப்பில் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை கடிதத்தில் தான் வாழ்க்கையினால் சலிப்படைந்ததாக எழுதியுள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து , வாடகை வீட்டில் தன் மனைவி , குழந்தையோடு வசித்துவந்துள்ளார். நேற்று அவர் மனைவி மற்றும் குழந்தை அவர்கள் தாத்தா வீட்டிற்கு சென்றனர்.

இரவு 1 மணி அளவில் குடித்துவிட்டு வந்து தனது முகநூலில் நேரடி ஒளிபரப்பில் தற்கொலை செய்வதாக கூறியுள்ளார். இதனைப் பார்த்த அவர் நண்பர்கள் திருப்பூர் காவல் நிலையத்திலும் , ராம்குமாரின்  மனைவியிடமும் கூறியுள்ளனர். 

ஆனால் போலீசார் வருவதற்குள் ராம்குமார் தூக்கிலிட்டுக் கொண்டர். மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ள நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.  இதைப் போல் ஏழு வருடம் முன்பு கூட இவ்வாறு செய்தார் என்று கூறி மனைவி கதறி அழுத்துள்ளார்.

A1TamilNews.com