துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்கத் தமிழர் செல்வராஜு படுகொலை! போலீசார் புதிய தகவல்கள்!!
செல்வராஜு மிகவும் எளிமையான பழகுவதற்கு இனிமையான மனிதர், கரோலைனா தமிழ்ச் சங்கத்தில் நிர்வாகக் குழுவில் பணியாற்றியிருக்கிறார். இலங்கைத் தமிழர் விவகாரத்திலும் மிகுந்த அக்கறை கொண்டவர் என்று நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில், செல்வராஜு படுகொலை குறித்து கேரி நகரப் போலீசார் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்கள். சம்பவம் நடைபெற்ற பகுதியின் அருகிலுள்ள வீட்டிலிருந்து ஒரு பெண்மணி அவசர எண் 911 க்கு அழைத்து, அவருக்குத் தெரிந்த தகவல்களை கூறியிருக்கிறார்.
மாநில பொது ஆவணச் சட்டத்தின் படி, கேரி நகரப் போலீசார் இந்த 911 அழைப்பு தொலைபேசி உரையாடலின் ஆடியோ வை வெளியிட்டுள்ளார்கள், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் அவசர உதவி எண் 911 க்கு அழைத்துள்ள இந்தப் பெண்மணி, “ வீட்டருகே உள்ள நீச்சல் குளம், அலுவலகக் கட்டிடத்திற்கு இடையே உள்ள மரங்கள் நிறைந்த பகுதியிலிருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டது. பாப், பாப், பாப் என்று 5 குண்டுகள் வெடிக்கும் சத்தம் அது.
மரங்கள் நிறைந்த பகுதியிலிருந்து வெளியேறிய ஒருத்தர் என் வீட்டு பின்பகுதியில் உள்ள புல்வெளி வழியாக ஓடினார். கையில் ஏதும் ஆயுதம் இல்லை. வெள்ளை அல்லது ஹிஸ்பானிக் இன ஆணாகத் தெரிந்தார். 20 வயது இருக்கலாம். டென்னிஸ் மைதானம் வரை ஓடுவது தெரிந்தது. அதற்குப் பிறகு எந்தப் பக்கம் ஓடினார் என்பதைப் பார்க்க முடியவில்ல,” என்று கூறியுள்ளார்.
இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தண்டனை பெற்றுத் தருவதற்கு இடையூறாக நாங்கள் வேறு எதையும் கூறுவதை யாரும் விரும்பமாட்டார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
மாநில செனட்டர் வைலி நிக்கல், “செல்வராஜ் படுகொலை அறிந்து பெரும் வேதனை அடைந்தேன். மதிய நேரத்தில் நடைக்காக சென்றவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கேரி நகர காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். செல்வராஜுக்கு மனைவியும், சிறுவயது மகளும் உள்ளார்கள்,” என்று அறிக்கை மூலம் கூறியுள்ளார்.