ஊரடங்கின் போது சுற்றித் திரிந்த பிரபல நடிகை மீது வழக்கு!

ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் உரிய காரணங்கள் இல்லாமல் காரில் சுற்றித் திரிந்ததற்காக பிரபல நடிகை பூஜா பாண்டே மீது வழக்கு தொடர்ந்துள்ளனர் மும்பை போலீசார். 45 வயது மதிக்கத் தக்க நபருடன் மும்பை மரைன் ட்ரைவ் பகுதியில் காரில் சுற்றிக் கொண்டிருந்துள்ளார் பூஜா பாண்டே. போலீசார் இடை மறித்து என்ன காரணத்திற்காக இங்கே வந்துள்ளீர்கள் என்று கேட்டபோது, பதில் ஏதும் இல்லாமல் முழித்துள்ளனர். இந்தியன் குற்றச் சட்டம் மற்றும் தேசிய பேரிடர் சட்டத்தின் கீழ் இவர் மீது
 

ரடங்கு உத்தரவை மதிக்காமல் உரிய காரணங்கள் இல்லாமல் காரில் சுற்றித் திரிந்ததற்காக பிரபல நடிகை பூஜா பாண்டே மீது வழக்கு தொடர்ந்துள்ளனர் மும்பை போலீசார்.

45 வயது மதிக்கத் தக்க நபருடன் மும்பை மரைன் ட்ரைவ் பகுதியில் காரில் சுற்றிக் கொண்டிருந்துள்ளார் பூஜா பாண்டே. போலீசார் இடை மறித்து என்ன காரணத்திற்காக இங்கே வந்துள்ளீர்கள் என்று கேட்டபோது, பதில் ஏதும் இல்லாமல் முழித்துள்ளனர்.

இந்தியன் குற்றச் சட்டம் மற்றும் தேசிய பேரிடர் சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 செம ஹாட்டான படங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் நடிகை பூஜா பாண்டே. இந்தி, தெலுங்குப் படங்களில் நடித்துள்ள இவர், கன்னடப்படத்திலும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தி தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ள பூஜா பாண்டேவுக்கு வயது 29.

A1TamilNews.com