நடிகர் சுஷாந்த் பெயரில் அறக்கட்டளை! இளைஞர்களுக்கு உதவி!!

மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட இந்தி நடிகர் சுஷாந்த் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்தும் பெரும் புகழ் பெற்றவர் சுஷாந்த். சுஷாந்த் மறைந்த 13ம் நாள் நிகழ்வின் போது குடும்பத்தினர் இதை அறிவித்துள்ளனர். சுஷாந்த் சிங் ராஜ்புத் அறக்கட்டளை என்ற பெயரில் செயல்படப் போகும் இந்த அறக்கட்டளை மூலம் சினிமா, விளையாட்டு, அறிவியல் துறைகளில் இளைஞர்களுக்கு உதவி செய்யப்படும் என்று கூறியுள்ளனர். சுஷாந்த் சிறுவயதில் வசித்த பாட்னா,
 

மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட இந்தி நடிகர் சுஷாந்த் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்தும் பெரும் புகழ் பெற்றவர் சுஷாந்த்.

சுஷாந்த் மறைந்த 13ம் நாள் நிகழ்வின் போது குடும்பத்தினர் இதை அறிவித்துள்ளனர். சுஷாந்த் சிங் ராஜ்புத் அறக்கட்டளை என்ற பெயரில் செயல்படப் போகும் இந்த அறக்கட்டளை மூலம் சினிமா, விளையாட்டு, அறிவியல் துறைகளில் இளைஞர்களுக்கு உதவி செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.

சுஷாந்த் சிறுவயதில் வசித்த பாட்னா, ராஜிவ் நகரில் உள்ள வீட்டை நினைவுச் சின்னமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுஷாந்த் பயன்படுத்திய பொருட்கள், வாசித்த புத்தகங்கள், நட்சத்திரங்களையும் கோள்களையும் பார்ப்பதற்கு ஆசையுடன் உபயோகித்த டெலிஸ்கோப் உள்ளிட்ட பொருட்களும் இந்த நினைவு இல்லத்தில் வைக்கப்பட உள்ளது.

ரசிகர்கள் நினைவில் சுஷாந்த் நிரந்தரமாக இடம்பெறும் வகையில் நினைவு இல்லத்தில் சுஷாந்த் பயன்படுத்திய அனைத்து பொருட்களும் இடம்பெறும்  என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

A1TamilNews.com