வதந்திகளை நம்ப வேண்டாம்! எஸ்.பி.பாலசுப்ரமணியம் மகன் அறிக்கை!!

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.. ”என் தந்தையின் உடல்நலம் குறித்து அக்கறை கொண்டு விசாரித்ததற்கு மிக்க நன்றி. அவர் ஐசியூவில் வென்டிலேஷனில் உள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம். அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து தகவல்களை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்கிறோம். மீண்டும்
 

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்..

”என் தந்தையின் உடல்நலம் குறித்து அக்கறை கொண்டு விசாரித்ததற்கு மிக்க நன்றி. அவர் ஐசியூவில் வென்டிலேஷனில் உள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம். அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து தகவல்களை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்கிறோம். மீண்டும் நன்றி.” என்று எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் இதை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com