தர்பார் படத்துக்குத் தடை? சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த டி.எம்.ஒய் கிரியேஷன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளது. தர்பார் படத்தின் தயாரிப்பாளரான லைக்கா புரொடக்ஷன்ஸ் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தையும் தயாரித்து இருந்தது. மலேசியாவில் 2.0 படத்தின் வினியோகத்திற்காக டி.எம்.ஒய் க்ரியேஷன்ஸ் நிறுவனம் 20 கோடி ரூபாய் முன்பணம் லைக்கா புரொடக்ஷனுக்கு கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.
 

னவரி 9ம் தேதி வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த டி.எம்.ஒய் கிரியேஷன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளது. தர்பார் படத்தின் தயாரிப்பாளரான லைக்கா புரொடக்‌ஷன்ஸ் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தையும் தயாரித்து இருந்தது.

மலேசியாவில் 2.0 படத்தின் வினியோகத்திற்காக டி.எம்.ஒய் க்ரியேஷன்ஸ் நிறுவனம் 20 கோடி ரூபாய் முன்பணம் லைக்கா புரொடக்‌ஷனுக்கு கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். மேலும் 12 கோடி ரூபாயும் கொடுத்துள்ளதாகசும் தெரிவித்துள்ளனர். படம் வெளியாகுவதில் கால தாமதம் ஏற்பட்டதால் ஒப்பந்தந்தை ரத்து செய்துள்ளனர்.

வட்டியுடன் சேர்த்து 32 கோடி ரூபாய் பாக்கித் தொகையை தர வலியுறுத்தி தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். 2.0 படம் வெளியாகுவதற்கு முன்னதாகவே திருப்பித் தர உத்தரவாதம் கொடுத்தும் எந்தப் பணமும் தரவில்லை. தற்போது தர்பார் படத்தை வெளியிட அனுமதித்தால், தங்களுக்கு சேர வேண்டிய பணம் கிடைக்க வழியில்லை என்பதால், தங்களுக்கு சேர வேண்டிய தொகையை தரும் வரை தர்பார் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் டி.எம்.ஒய் க்ரியேஷன்ஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஜனவரி 2ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அமெரிக்காவில் ஜனவரி 8ம் தேதியே தர்பார் படத்தின் ப்ரீமியர் காட்சிகள் நடைபெற உள்ளது. உலகமெங்கும் 9ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தர்பார் பட வெளியீட்டுக்கு தடை கோரிய வழக்கால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

www.vanakamindia.com