பிரபல நடிகை திடீர் திருமணம்! பெங்களூர் தொழிலதிபரை மணந்தார்!!

 

பிரபல நடிகை ப்ரணிதா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

பெங்களூருவை சேர்ந்த நடிகை ப்ரணிதா சுபாஷ் கடந்த 2010-ம் ஆண்டு போக்கிரி என்ற கன்னட படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்த அவர் 2011-ல் வெளியான உதயன் என்ற தமிழ் படம் மூலம் அறிமுகமானார்.

பெரும்பாலும் கன்னடம், தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் கார்த்தி உடன் சகுனி, சூர்யா உடன் மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் அதர்வா உடன் 2017-ம் ஆண்டு ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் நடத்தவர் அதன்பிறகு தமிழ் திரையுலகம் பக்கம் வரவே இல்லை.
 
இந்நிலையில் ப்ரணிதா சுபாஷ் பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபரான நிதின் ராஜுவை நேற்று திருமணம் செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து முன் அறிவிப்பு எதுவும் இல்லாத நிலையில், 30-ம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துவிட்டதாக இன்ஸ்டாகிராமல் பதிவிட்டுள்ளார்.

A post shared by Pranitha Subhash 🧿 (@pranitha.insta)

உறவினர்கள், நண்பர்கள் மூலம் திருமணப் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து அவர் திருமணமானதை உறுதிபடுத்தியுள்ளார். கொரோனா 2-வது மிக அதிகமாக இருப்பதால் திருமணத்தில் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும், முன்னரே தெரிவிக்காததற்கு மன்னிக்கவும் என இன்ஸ்டாகிராம் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ப்ரணிதாவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகினர், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.