சுகாதாரத்துறையிடம் சிக்கிக் கொண்ட இயக்குநர் பாரதிராஜா!

தமிழகத்தில் கொரோனா பரவல் படு தீவிரமாக பரவி வரும் நிலையில் உடல்நிலை சரியில்லாத தனது சகோதரியை பார்க்க இயக்குநர் பாரதிராஜா சென்ற வாரம் தேனி மாவட்டத்தில் இருக்கும் அல்லி நகரத்துக்கு சென்றுள்ளார். சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களை வழியில் கடந்து வந்ததால் இயக்குநர் பாரதிராஜாவுக்கும், அவரது உதவியாளருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரொனா டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ் என்றே வந்த போதிலும் அவரது வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் வீடு
 

மிழகத்தில் கொரோனா பரவல் படு தீவிரமாக பரவி வரும் நிலையில் உடல்நிலை சரியில்லாத தனது சகோதரியை பார்க்க இயக்குநர் பாரதிராஜா சென்ற வாரம் தேனி மாவட்டத்தில் இருக்கும் அல்லி நகரத்துக்கு சென்றுள்ளார்.

சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களை வழியில் கடந்து வந்ததால் இயக்குநர் பாரதிராஜாவுக்கும், அவரது உதவியாளருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கொரொனா டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ் என்றே வந்த போதிலும் அவரது வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் வீடு மற்றும் காரில் தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது.

இதற்கு ஒப்புக் கொண்ட இயக்குநர் பாரதிராஜா வீட்டை விட்டு வெளியில் நடமாடி வருவதாக அவ்வூர் மக்கள் புகார் அளித்துள்ளனர். தேனி அல்லி நகரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பாரதிராஜா குரங்கணியில் சுகாதாரத்துறை பணியாளருடன் போட்டோ எடுத்துள்ளார்.

அப்பணியாளர் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பாரதிராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

A1TamilNews.com