விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்! நடிகர் சூர்யா உருக்கம்!
விமானத்தில் பயணம் செய்தவர்களில் 120 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விமான விபத்தைப் பற்றி பலதரப்பட்ட சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. மோசமான வானிலை, விமான தளத்தின் ஓடு பாதை சரியில்லை எனப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் , நடிகர் சூர்யா விமான விபத்து குறித்து பதிவு ஒன்றை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும். விமானத்தில் பயணம் செய்தவர்களை விரைவாக மீட்ட அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கும், விமானிகளுக்கும் மிகவும் நன்றி என தெரிவித்துள்ளார்.