யாருக்கும் வாய்க்காத ரஜினியின் வெற்றி ரகசியம்..

அவருக்கு 68 வயதாகின்றது, பேரன் பேத்தியும் எடுத்து ஓய்வுபெறும் வயதையும் தாண்டி விட்டார். மொட்டை தலையும் அழுக்கு தாடியும் கிழிந்த ஜிப்பாவும் ரப்பர் செருப்புமாகத்தான் பொதுவில் திரிகின்றார் ஆனால் சினிமாவில் அவருக்கான இடத்தை எந்த வாலிபனாலும் தொடமுடியவில்லை. இந்தியா தாண்டி அமெரிக்கா முதல் ஜப்பான் வரை எல்லோர் மனதையும் மதம் இனம் மொழி தாண்டி அவரால் தொடமுடிகின்றது. நிச்சயம் இன்னொரு நடிகனுக்கு அது சாத்தியமில்லை. கிட்டதட்ட 70 வயதிலும் எல்லோருக்கும் அவரால் சவால் கொடுக்க முடிகின்றது. “42 வருடமாக நானே நம்பர்
 

வருக்கு 68 வயதாகின்றது, பேரன் பேத்தியும் எடுத்து ஓய்வுபெறும் வயதையும் தாண்டி விட்டார். மொட்டை தலையும் அழுக்கு தாடியும் கிழிந்த ஜிப்பாவும் ரப்பர் செருப்புமாகத்தான் பொதுவில் திரிகின்றார்

ஆனால் சினிமாவில் அவருக்கான இடத்தை எந்த வாலிபனாலும் தொடமுடியவில்லை. இந்தியா தாண்டி அமெரிக்கா முதல் ஜப்பான் வரை எல்லோர் மனதையும் மதம் இனம் மொழி தாண்டி அவரால் தொடமுடிகின்றது.

நிச்சயம் இன்னொரு நடிகனுக்கு அது சாத்தியமில்லை. கிட்டதட்ட 70 வயதிலும் எல்லோருக்கும் அவரால் சவால் கொடுக்க முடிகின்றது. “42 வருடமாக நானே நம்பர் 1, கண்ணா இன்னும் 8 வருடம்தான் 50வது வருடமும் நானே நம்பர் 1 ” என வந்து நிற்கின்றார் ரஜினி.

ஆம் அச்சாதனை சாதாரணம் அல்ல‌. அவரை தர்பார் ஸ்டில்லுக்காக கலாய்க்கின்றார்களாம். ஆரம்ப படங்களில் காமெடியனாக தன்னைதானே கலாய்த்தவர் ரஜினி , இதெல்லாம் அவருக்கு சாதாரணம்.

மாபெரும் வெற்றியினை அவர் தொழிலில் ஆண்டவன் அவருக்கு அருளியிருகின்றான்.அந்த வெற்றியில் மனிதர் சிலரை குழப்புவாரே தவிர ஆணவத்தில் ஆடவுமில்லை, யார் வாழ்வினை அழிக்கவுமில்லை.

அது ஞானிக்கு உள்ள பக்குவம். அவரை கலாய்ப்பவன் கலாய்த்து கொண்டே இருக்கட்டும், அவர் வழியில் தெய்வத்தின் ஆசியும் , பில்லியன் டாலரும் கொட்டி கொண்டேதான் இருக்கும்

அட தமிழகத்தை விடுங்கள், “பேட்ட ..” திரையரங்கில் என்னருகே சீன குடும்பமும் அவர்கள் நடுவில் 7 வயது குழந்தையும் இருந்தது. ஆச்சரியமாக இருந்தது, உங்களுக்கு தமிழ்தெரியுமா? இவரை தெரியுமா என கேட்டேன்.

“எங்களுக்கு தெரியாது ஆனால் இவரென்றால் என் குழந்தைக்கு அப்படி பிடிக்கும், அவளுக்காக வந்தோம். மொழிபுரியாவிட்டால் என்ன? அவள் அவரால் மகிழ்வாள் அது போதும்”

ரஜினியின் வெற்றி இதுதான், யாருக்கும் வாய்க்காத ஒரு வசியமும் ரகசியமும் கொண்ட வெற்றி. இந்த கலாய்ப்புகள் எல்லாம் அவருக்கு நயா பைசா சரிவினை கூட தராது, அவருக்கான இடத்தில் துரும்பாக கூட விழாது..

ஆண்டவன் அவருக்கு கொடுத்ததை தடுக்கும் சக்தி யாருக்கும் இல்லை..

– ஸ்டான்லி ராஜன்