இயக்குநர் ராஜமெளலிக்கு கொரோனா!
சில நாட்களுக்கு முன் திரையுலகில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.தற்போது இதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இந்த வரிசையில் தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமெளலிக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனை செய்யப்பட்டதில் மிதமான கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி நாங்கள் எங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்.
நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும் , பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருக்கிறோம் என தமது ட்விட்டர் பக்கத்தில் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.