அமிதாப் பச்சன் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்!அபிஷேக் பச்சன் ட்வீட்!

இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வந்த போதிலும் பாரபட்சமின்றி அனைவருக்கும் பரவி வருகிறது. அந்த வரிசையில் பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும் , அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்த பலரும், அவர்
 


இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வந்த போதிலும் பாரபட்சமின்றி அனைவருக்கும் பரவி வருகிறது.

அந்த வரிசையில் பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும் , அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து  மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்த பலரும், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று கொரோனாவிலிருந்து குணமடைந்து நானாவதி மருத்துவமனையில் இருந்து  வீடு திரும்பியுள்ளார். இந்த தகவலை அவரது மகன் அபிஷேக் பச்சன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பிரார்த்தனைகள் செய்த  அனைவருக்கும் நன்றியும், வாழ்த்துக்களும் எனவும் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com