2019-20ம் ஆண்டுக்கான குருபெயர்ச்சி பலன்கள்..கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு!

குருபெயர்ச்சி பலன்கள் ( 4-11-2019 முதல் 20-11-2020) கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்) இது வரை 5மிடத்தில் சஞ்சரித்து வந்த குரு இப்போது 6மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. 6ம் வீடு மற்றும் 9ம் வீட்டின் அதிபதியான குரு 9மிடத்திலிருந்து நன்மையான பலன்களைத் தரும். இந்த காலக்கட்டத்தில் அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சிறப்பாக நடைபெறும்.
 

குருபெயர்ச்சி பலன்கள் ( 4-11-2019 முதல் 20-11-2020)

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

இது வரை 5மிடத்தில் சஞ்சரித்து வந்த குரு இப்போது 6மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. 6ம் வீடு மற்றும் 9ம் வீட்டின் அதிபதியான குரு 9மிடத்திலிருந்து நன்மையான பலன்களைத் தரும். இந்த காலக்கட்டத்தில் அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். 

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சிறப்பாக நடைபெறும். கடன் வாங்கி வீடு, வாகனம் வாங்குவீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். உடல்நலக்குறைவு உண்டாகும். எதிரிகள் ஒதுங்கிச் செல்வர். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும்.

குருவின் பார்வை பலன்கள்

6மிடத்தில் சஞ்சரிக்கும் குரு தனது 5ம் பார்வையில் 10மிடத்தை பார்க்கிறது. இதனால் வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். 

குரு 7ம்பார்வையில் 12ம் வீட்டைப் பார்க்கிறது. இதனால் புதிய முதலீடுகள் செய்ய நேரிடும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். குடும்பத்தில் சுபவிரயம் உண்டாகும். அயல்நாட்டுப் பிரயாணம் உண்டாகும்.

குரு 9ம் பார்வையில் 2ம் வீட்டைப் பார்கிறது. நல்ல பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வங்கியில் நிதிநிலை உயரும். 

குரு சஞ்சரிக்கும் சாரப்பலன்கள்

குரு 4-1-2020 வரை மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறது. மூலத்தின் அதிபதி கேது. கேதுவுக்கு சொந்த வீடு இல்லாததினால் அது நின்ற வீட்டின் பலனைத் தரும். எனவே ஜாதகத்தில் கேது நன்மை தரும் வீட்டில் இருந்தால் நன்மையான பலன்களைத் தரும். 

குரு பூராட நட்சத்திரத்தில் 7-3-2020 வரையிலும் அதன்பின் 20-7-2020 லிருந்து 30-10-2020 வரையிலும் சஞ்சரிக்கிறது. பூராடம் சுக்கிரனுடையது. சுக்கிரன் கடகத்திற்கு 4ம் வீடு மற்றும் 11ம் வீட்டின் அதிபதியாவதினால் வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். பணவரவு உண்டாகும்.

29-3-2020 லிருந்து 30-6-2020 வரையிலும் சூரியன் நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது. சூரியன் 2க்குரியவன். ஆகையினால் பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 

குருவின் வக்ர கதியின் பலன்கள்

குரு 15-5-2020 முதல் 30-6-2020 வரையில் மகர ராசியில் வக்ர கதியில் இருக்கிறது. இந்தக் காலக்கட்டம் நன்மையான பயன்களைத் தரும். திருமணம் கைகூடும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். 

30-6-2020 முதல் 14-9-2020 வரை குரு தனுசு ராசியில் வக்ர கதியில் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். 

பரிகாரம்: அர்த்தநாரீஸ்வரையும் விஷ்ணுவையும் வழிபட்டால் நன்மைகள் கோடி தேடி வரும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

இதுவரை 4மிடத்தில் சஞ்சரித்து வந்த குரு இப்போது 5மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. சிம்மராசிக்கு குரு 5மிடம் மற்றும் 8மிடத்தின் அதிபதி ஆவார்.  5மிடத்து குரு குழந்தை பாக்கியத்தைக் கொடுக்கும். காதலில் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதத்தில் முன்னேற்றத்தைத் தரும். பங்குச் சந்தையில் லாபம் தரும். 

கடன் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும். ரேஸ், லாட்டரியில் லாபத்தைத் தரும். போட்டிகளில் வெற்றியைத் தரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். இன்சுரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபப் பங்கு கிடைக்கும். 

குருவின் பார்வை பலன்கள்

5மிடத்திலிருக்கும் குரு 5ம் பார்வையாக, 9ம் வீட்டைப் பார்க்கிறது. இதனால் அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். நீண்டதூரப் பயணம் உண்டாகும். தர்மகாரியங்களில் மனம் செல்லும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். பூர்விகச் சொத்துகள் கைக்கு வந்து சேரும்.

7ம் பார்வையில் 11மிடத்தைப் பார்ப்பதினால் பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். காதலில் வெற்றி கிடைக்கும்.

9ம் பார்வையில் இராவியைப் பார்ப்பதினால் இட மாற்றம் உண்டாகும். உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மனம் கேளிக்கையில் செல்லும். மதிப்பு, செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் மக்கள் மனதில் இடம் பெறுவர். கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். சில சமயங்களில் மனக்குழப்பம் உண்டாகும்.

குரு சஞ்சரிக்கும் சாரப்பலன்கள்

குரு 4-1-2020 வரை மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறது, மூலம் கேதுவுடையது. கேதுவுக்கு சொந்த வீடு கிடையாததினால், ஜாதகத்தில் கேது நன்மை தரும் வீட்டில் இருந்தால் நன்மையான பலன்களைத் தரும்.

பூராட நட்சத்திரத்தில் 7-3-2020 வரையிலும் அதன்பின் 20-7-2020 லிருந்து 30-10-2020 வரையிலும் சஞ்சரிக்கிறது. பூராடம் சுக்கிரனுக்குரியது. சுக்கிரன் 3 மற்றும் 10ம் வீட்டின் அதிபதியாவதினால் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். எடிட்டிங், விளம்பரத் தொழில், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். பிரயாணம் நன்மை தரும். வியாபாரத்தில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஒப்பந்ததாரர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். 

29-3-2020 லிருந்து 30-6-2020 வரையிலும் அதன்பின் 30-10-2020 லிருந்து 20-11-2020 வரையிலும் சூரியன் நட்சத்திரமான உத்திராடத்தில் குரு சஞ்சரிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் உடல்நலம் சிறிது பாதிக்கப்படும். கடன் தொல்லைகள் அகலும். இடமாற்றம் உண்டாகும்..

குருவின் வக்ர கதியின் பலன்கள்

குரு 15-5-2020 முதல் 30-6-2020 வரையில் மகர ராசியில் வக்ரகதியில் இருக்கிறது. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவில் விரிசல் உண்டாகும். வேலை கிடைப்பதில் சிரமம் காணப்படும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உடல்நலம் பாதிக்கும். 

30-6-2020 முதல் 14-9-2020 வரை குரு தனுசு ராசியில் வக்ர கதியில் இருக்கிறது. இந்த காலக் கட்டத்தில் வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். 

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு, பிரதோஷம் அன்று விரதம் இருந்தால் நன்மை கிட்டும்.

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

இது வரை மூன்றாம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு இப்போது 4மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. வீடு, நிலம் , வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபகரமாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். கட்டிங்கள் மூலம் பணவரவு உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 

கூட்டு வியாபாரம் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். காதல் விவகாரத்தில் சில பிரச்சினைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. பங்குச் சந்தை நஷ்டம் தரும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படும். போட்டிகளில் தோல்வி ஏற்படும்.

குருவின் பார்வை பலன்கள்

நாலாமிடத்திலிருக்கும் குரு தனது 5ம்பார்வையை 8ம் வீட்டைப் பார்க்கிறது. தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதினால் வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சுரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். 

குரு தனது 7ம் பார்வையில் 10ம் வீட்டை பார்க்கிறது. எனவே வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சில பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும்.

குரு 9ம் பார்வையில் 12ம் வீட்டைப் பார்ப்பதினால் சுபவிரயங்கள் உண்டாகும். புதுத் தொழிலில் முதலீடு செய்ய நேரிடும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் உண்டாகும்.

குரு சஞ்சரிக்கும் சாரப்பலன்கள்

குரு 4-1-2020 வரை மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறது, மூலம் கேதுவுடையது. கேதுவுக்கு சொந்த வீடு இல்லாமையால், அது இருக்கும் வீட்டின் பலனைத் தரும். எனவே ஜாதகத்தில் நன்மை தரும் வீட்டில் இருந்தால், நன்மையான பலனைத் தரும்

குரு பூராட நட்சத்திரத்தில் 7-3-2020 வரையிலும் அதன்பின் 20-7-2020 லிருந்து 30-10-2020 வரையிலும் சஞ்சரிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகப் பிரயாணம் ஏற்படும். தந்தையினால் நன்மைகள் கிடைக்கும்.

29-3-2020 லிருந்து 30-6-2020 வரையிலும் அதன்பின் 30-10-2020லிருந்து 20-11-2020 வரையிலும் க்சூரியனுடைய நட்சத்திரமான உத்திராடத்தில் குரு சஞ்சரிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் இடமாற்றம் உண்டாகும். வீண் விரயங்கள் ஏற்படும். முதலீடுகளிலிருந்து வரவு இருக்காது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும்.

குருவின் வக்ர கதியின் பலன்கள்

குரு 15-5-2020 முதல் 30-6-2020 வரையில் மகர ராசியில் வக்ர கதியில் இருக்கிறது. இந்தக் காலத்தில் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். 

30- 6-2020 முதல் 14-9-2020 வரை குரு தனுசு ராசியில் வக்ரகதியில் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் வீடு, வாகனம் விற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இடமாற்றம் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்றாக நடைபெறும்.

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து பெருமாளை வழிபட நன்மை வரும்.

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கான குருபெயர்ச்சி பலன்கள் நாளை வெளிவரும்

முந்தைய ராசிகளுக்கான பலன்கள்:

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கான குருபெயர்ச்சி பலன்கள்

 

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com