அமெரிக்காவில் துணிக்கூடைக்குள் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட 5 வயது பெண் குழந்தை.. அதிர்ச்சியில் பெற்றோர்!

 

அமெரிக்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி அழுக்குத் துணிகள் போடும் கூடைக்குள் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படித்தியுள்ளது.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தின் டிரஸ்வில்லி என்ற பகுதியைச் சேர்ந்தவர் க்ளோ தெரசா வில்லியம்சன் (5). இவர், டிரஸ்வில்லில் மழலையர் பள்ளி பயன்று வந்தார். கடந்த 13-ம் தேதி சிறுமி தனது அண்ணன் மற்றும் அக்காவுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் மாயமாகி உள்ளாள்.

அதன் பிறகு, அவள் அழுக்குத் துணிகள் போடும் கூடைக்குள் சுயநினைவின்றிக் கிடப்பதை அவளது பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக க்ளோவை பர்மிங்காமில் உள்ள செயின்ட் வின்சென்ட் ஈஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் காலை 7.17 மணிக்கு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

க்ளோ இறந்தது விபத்து என கருதப்படும் நிலையில், அவளது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்தும், அவள் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரவில்லை. எனவே, கூடுதல் பரிசோதனைகளை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். க்ளோயின் மரணம் அவளது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், போலீசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

டிரஸ்வில்லி நகர பள்ளிகள் திங்களன்று பின்வரும் அறிக்கையை வெளியிட்டன. “TCS கண்காணிப்பாளர் டாக்டர். பேட்ரிக் மார்ட்டின், ஒரு மழலையர் பள்ளி மாணவர் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. குழந்தை ட்ரஸ்வில்லி சிட்டி ஸ்கூல் சிஸ்டத்தில் ஒரு ஆசிரியரின் மகள். இந்த மாணவி ஒரு விலைமதிப்பற்ற, புத்திசாலி மற்றும் ஆர்வமுள்ள குழந்தை, அவரது இதயத்தை உடைக்கும் இழப்பு எங்களைப் பாதித்தது. இது மிகவும் சோகமான மற்றும் சோகமான நிகழ்வு, எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் குடும்பத்தினருடன் உள்ளன.

இந்த சோகத்தை அடுத்து எங்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆலோசகர்களை நாங்கள் தளத்தில் வைத்திருக்க ஏற்பாடு செய்கிறோம். நாங்கள் ஒரு பள்ளியை விட அதிகம் டிரஸ்வில்லில் உள்ள அமைப்பு, நாங்கள் ஒரு குடும்பம். இது போன்ற ஒன்று நம் அனைவரையும் தொடுகிறது, மேலும் இந்த துயரமான இழப்பைச் சமாளிக்க வரும் நாட்களில் மற்றும் வாரங்களில் நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்போம்.” என்று தெரிவித்துள்ளது.