பெற்றோரை 282 தடவை கத்தியால் குத்தி கொன்ற மகன்... இங்கிலாந்தில் அதிர்ச்சி சம்பவம்!!

 

இங்கிலாந்தில் பெற்ற மகனே தாய் தந்தை இருவரையும் 282 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் யார்க்ஷயர் பகுதியில் 37 வயதுடைய நபர் ஒருவர் தனது தாயையும் தந்தையையும் 282 முறை கத்தியால் குத்தி கொன்றுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் மூன்று வெவ்வேறு கத்திகள் பயன்படுத்தப்பட்டன. சமீபத்தில் பெற்றோரை கொன்ற வழக்கில் மகனுக்கு எதிராக நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

யார்க்ஷயர்லைவ் இன் அறிக்கையின்படி, 66 வயதான ஜான் மற்றும் பெவர்லி ஆகியோரின் மகன் டேவிட் என்பவரால் கொல்லப்பட்டனர். அவர் மூன்று வெவ்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்தினார். டேவிட் ஜான் மற்றும் பெவர்லியை 282 முறை குத்தினார். இதன் காரணமாக அவர்கள் டிசம்பர் 21, 2021 அன்று இறந்தார்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கொலையை செய்துவிட்டு, டேவிட், போலீசாருக்காக வீட்டு வாசலில் அமர்ந்து காத்திருந்தார். அவரே போலீஸை அழைத்தார். போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ​​அதிர்ச்சி அடைந்தனர். ரத்த வெளத்தில் இரண்டு உடல்கள் உள்ளே கிடந்தன. டேவிட் சம்பவ இடத்திலேயே தனது பெற்றோரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கு நேற்று (ஜனவரி 20) பிராட்போர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது டேவிட் பல வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், ஆனால் மீண்டும் நோய்வாய்ப்பட்டார். இருப்பினும், அவர் சொந்தமாக மருந்து உட்கொள்வதை நிறுத்திவிட்டார்.

அவர் ஸ்கிசோஃப்ரினியா மற்றும் சித்தப்பிரமை மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு டேவிட் மருத்துவரை பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு மருந்து கிடைக்கவில்லை.  டேவிட் தனது தாயாரை கத்தியால் 90க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அதே நேரத்தில், தந்தை 180 முறைக்கும் மேல் தாக்கப்பட்டார். அவர் வன்முறையாளர் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை சிறையில் அடைக்க பரிந்துரைக்கப்பட்டது.