சுகர் லெவலை கட்டுப்படுத்தும் சூப்பர் மசாலாக்கள்.. தவற விடாதீங்க!

 

இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது மிகவும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. பெரும்பாலும் இது நமது வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையின் காரணமாக உருவாகிறது. நீரிழிவு நோய் வருவதற்கு 2 காரணங்கள் உள்ளன. முதலாவது நமது வாழ்க்கை முறை, இரண்டாவது நமது மரபணு. அதனால்தான் ஒரு நீரிழிவு நோயாளி தனது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் அவ்வாறு செய்யாவிட்டால், உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும்.

சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்களைக் கொண்டும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சில மசாலா பொருட்களை பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றை பயன்படுத்து நீரிழிவு நோயை எளிதாக கட்டுக்குள் வைக்கலாம். 

இலவங்கப்பட்டை:

ஒரு பாத்திரத்தில் இலவங்கப்பட்டையை போட்டு நன்கு கொதிக்க வைத்து இலவங்கப்பட்டை தேநீர் தயாரிக்கவும். பிறகு வடிகட்டி அதை பருகவும். இலவங்கப்பட்டை ஆன்டிவைரல், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. ஆகையால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. இது தவிர, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இதில் உள்ளன. ஆகையால் இலவங்கப்பட்டை டைப்-2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது.

கிராம்பு:

ஆய்வுகளின்படி, கிராம்புகளை மெல்லுவது சிறந்த இன்சுலின் மேலாண்மைக்கு உதவும். ஆன்ட்டி செப்டிக், அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட கிராம்பு செரிமானத்தை சீராக்குவதோடு ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும்.

இஞ்சி:

இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி அல்லது நசுக்கி, ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து தேநீர் தயாரிக்கவும். அதன் பிறகு நீங்கள் அதை குடிக்க வேண்டும். இஞ்சி டீ குடிப்பதன் மூலம், உங்கள் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.

பூண்டு:

பூண்டில் அலிசின் என்ற பயோ ஆக்டிவ் கூறு உள்ளது. இது ரத்த சர்க்கரை நோயாளிகளின் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக கருதப்படுகிறது.

வெந்தியம்:

வெந்தய விதைகள் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த உணவுப் பொருள். இந்த விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்கி, கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உறிஞ்சுதவை மெதுவாக்குகிறது. இதனுடன், உங்கள் இதயத்தின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். மேலும் வெந்தய விதைகளால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது.

மஞ்சள்:

மஞ்சளில் குர்குமின் என்னும் செயலில் உள்ள கூறு உள்ளது. இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆய்வுகளிலும் மஞ்சள் நீர் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, உடல் பருமனமாவதைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளன.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)