மீண்டும் தந்தையான பிரபல நடிகர்.. குவியும் வாழ்த்துகள்!!

 

பிரபல நடிகரும் இயக்குநருமான பிரபுதேவாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடனம் மூலம் திரை வாழ்க்கையை தொடங்கிய பிரபுதேவா, 1994-ல் வெளியான ‘இந்து’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, போக்கிரி, வில்லு, வெடி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதனிடையே 1995-ம் ஆண்டு ரம்லாத் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மகன்களும் இருந்தனர். அதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

பின்னர் இவர்களது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட 2011ம் ஆண்டு அவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அப்போது சலசலப்பாக பேசப்பட்ட நடிகை நயன்தாரா பிரபுதேவா காதலும் திருமணம் வரைக்கும் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் பாதியிலேயே நின்றது.

இதையடுத்து, கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரபுதேவா, ஹிமானி சிங் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். ஆரம்பத்தில் அவரது திருமணம் ரகசியமாக இருந்த நிலையில், பிரபுதேவாவின் மூத்த சகோதரர் ராஜு சுந்தரம் இதை உறுதி செய்தார். பின்னர் 2 வருடங்களாக அவரை பெரிதாக வெளியுலகிற்கு அழைத்து வருவதை தவிர்த்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மனைவி ஹிமானி சிங்குடன் திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.

இந்நிலையில், ஹிமானி சிங் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து பிரபுதேவா மீண்டும் தந்தையானார். இந்த பெண் குழந்தை பிரபுதேவாவுக்கு மட்டுமின்றி அவர்களின் வம்சத்துகே தேவதையாகவும், மகாராணியாகவும் உள்ளார். ஏனெனில் பிரபுதேவாவின் அப்பா சுந்தரம் மாஸ்டருக்கு ராஜு சுந்தரம், பிரபுதேவா, நாகேந்திர பிரசாத் என மூன்றுபேரும் ஆண் மகன்கள்.  அதேபோல் பிரபுதேவாவின் முதல் மனைவியான ரமலத்துடன் வாழ்ந்த போது மூன்று மகன்கள்தான். 

மேலும் பிரபுதேவாவின் சகோதரர்களான ராஜு சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத்துக்கும் ஆண் வாரிசுகள்தான் உள்ளனர். இந்த சூழலில் பிரபுதேவாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் அவர்களது குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளனர். இதையடுத்து ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.