பிரபல பாடகி ஜஹாரா திடீர் மரணம்.. ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி!

 

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி ஜஹாரா கல்லீரல் பிர்ச்சினை காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 36.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி ஜஹாரா, பாடல் ஆசிரியராகவும் உள்ளார். இவரை புலேல்வா ம்குடுகானா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில், அவர் துரதிர்ஷ்டவசமாக கடந்த 11-ம் தேதி அன்று காலமானார். சில வாரங்களுக்கு முன் கல்லீரல் பிரச்சினை காரணமாக ஜோகன்னஸ்பர்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு இசை ரசிகர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜஹாரா நவம்பர் 9, 1987 அன்று தென்னாப்பிரிக்காவின் கிழக்கு லண்டனில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே தனது இசைத் திறமையை வெளிப்படுத்திய அவர், சொந்தமாக கித்தார் வாசிக்கக் கற்றுக்கொண்டார். 2011 ஆம் ஆண்டில், ஜஹாராவின் முதல் ஆல்பமான லோலிவை வெளியிட்டார், இது மக்களிடம் மிகவும் பிரபலமானது.

ஜஹாராவின் வலுவான பாடலும் அர்த்தமுள்ள பாடல் வரிகளும் தென்னாப்பிரிக்காவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களைத் தொட்டன. அவர் மொத்தம் ஐந்து வெற்றிகரமான ஆல்பங்களை உருவாக்கி உள்ளார். இந்த ஆண்டின் சிறந்த பெண் கலைஞருக்கான தென்னாப்பிரிக்க இசை விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஜஹாராவின் இசை எப்போதும் நினைவுகூரப்படும், அவர் ஒரு திறமையான கலைஞர் மட்டுமல்ல, ஒரு முன்மாதிரி மற்றும் தென்னாப்பிரிக்க இசை சமூகத்தின் நேசத்துக்குரிய இசைப்பிரியராகவும் இருந்துள்ளார். அவரது மறைவிற்கு உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.