விமான நிலையத்தில் இளைஞரிடம் ஆபாசமாக நடந்து கொண்ட கவர்ச்சி நடிகை.! அதிர்ச்சி வீடியோ

 

கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா விமான நிலையத்தில் இளைஞரிடம் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாடல்கள், நடிகைகள் எல்லாம் நாளிதழ்களின் அட்டை படங்களுக்காக லேசான கவர்ச்சியை புகைப்படமாக எடுத்து அதை நாளிதழ் நிறுவனங்கள் பிரிண்ட் போட அனுமதிப்பார்கள். அந்த புத்தகங்களும் நன்றாக விற்பனையாகும். ஆனால் எந்த ஒரு நடிகையும் ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தை பிரசுரிக்க ஒப்புக் கொள்ள மாட்டார்கள். கவர்ச்சி இருக்கும் ஆனால் ஆடையின்றி இருக்காது. ஆடையின்றி புகைப்படங்களை பிரசுரிக்க அனுமதி கொடுத்த ஒரே நடிகை பாலிவுட்டை சேர்ந்த ஷெர்லின் சோப்ரா.

இவர் நாள்தோறும் கிறங்கடிக்கும் கவர்ச்சிப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இவர் கட்டுக் கடங்காத இளம் ரசிகர் பட்டாளத்தை தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார். நிறைய பேர் இவரது ரசிகர்களாக அன்றாடம் முளைக்கிறார்கள். ஷெர்லின் ஷோப்ரா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியுடன் போஸ் கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களுடன் நெருங்கி பழகவும் செய்கிறார்.

சமீபத்தில் விமான நிலையத்தில் ஷெர்லின் ஒரு ரசிகரிடம் முரட்டுத்தனமாக ஆபாசமாக நடந்து கொண்டது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகும் வீடியோவில் ஷெர்லின் ஒரு இளைஞரை வலுக்கட்டாயமாக பிடித்து ஆபாச அசைவுகளுடன் நடனமாடுகிறார்.ஆனால் அந்த இளைஞர் விலகி செல்ல முயற்சிக்கிறார் ஆனால் ஷெர்லின் விடவில்லை. இதனால் ஷெர்லினின் நடத்தை கடுமையாக விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது.


ஷெர்லின் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ட்விட்டர் பயனாளர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். இன்னும் சிலர் இந்தப் பெண் எங்கிருந்தாலும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார் என கூறியுள்ளார். இது ஆண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என கூறியுள்ளனர். மேலும் சிலர் மும்பை போலீசாரை டேக் செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.