2-வது திருமணம் செய்யும் சமந்தா..? ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த நடிகை!

 

இன்ஸ்டாகிராமில் 2வது திருமணம் குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதில் அளித்துள்ளார்.

2010-ல் வெளியான ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.

இவருக்கும் தெலுங்கு பட உலகத்தின் முக்கிய நட்சத்திரமாக கருதப்படும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தானியாவிற்கும் 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பதை தொடர்ந்த சமந்தா, புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்லறீயா மாமா’ பாடலில் ஒட்டுமொத்த க்ளாமரையும் இறக்கி ரசிகர்களை கிறங்கடிக்க வைத்தார். சுமூகமாக சென்ற இந்த காதல் ஜோடியின் வாழ்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமந்தா நாக சைதன்யா 2022-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த அவர், தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மயோசிட்டிஸ் நோய்க்காக மீண்டும் சிகிச்சை எடுத்து வருகிறார். பின்னர் இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த இவர் தான் கமிட்டான திரைப்படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது சமந்தா மயோசிட்டிஸ் நோயில் இருந்து மீண்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை சமந்தா தனது பிஸியான வேலைக்கு மத்தியிலும் ரசிகர்களுடன் உரையாடுவதை தவறாமல் கடைப்பிடித்து வருகிறார். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தனது இன்ஸ்டா ஸ்டோரியில் Ask Me Anything என்று குறிப்பிட்டிருந்தார். அவ்வளவுதான், ரசிகர்கள் அனைவரும் தங்களது கேள்விகளை சமந்தாவிடம் பதிவாக பகிர, அதில் தேர்ந்தெடுத்து அவருக்கு அதற்கு பதில் அளித்தார்.

சமந்தாவிடன் ரசிகர் ஒருவர் நீங்கள் மறுமணம் செய்வது பற்றி யோசித்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு யாரும் எதிர்பார்த்திராத வகையில் வித்தியாசமான பதிலை அளித்தார். “புள்ளி விவரத்தின்படி இது மோசமான முதலீடாக அமையக்கூடும்” என்று ஸ்மைலி எமோஜியுடன் பதிலை பகிர்ந்தார். தனது பதிலுடன், டைவர்ஸ் எண்ணிக்கை தொடர்பான பதிவு ஒன்றையும் பகிர்ந்தார். இதன் மூலம் மற்றொரு திருமணத்துக்கு தான் தயாராக இல்லை என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.