பிரபல இளம் நடிகர் மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்!

 

தமிழ் மற்றும் இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த நடிகர் பவன் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 25.

கர்நாடக மாநிலம், மாண்டியா பகுதியைச் சேர்ந்தவர் பவன். இவர், நேற்று அதிகாலை 5 மணிக்கு மும்பையில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார். பவனின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான மாண்டியாவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டியா எம்எல்ஏ எச்.டி.மஞ்சு, முன்னாள் எம்எல்ஏ கே.பி.சந்திரசேகரா, முன்னாள் அமைச்சர் கே.சி.நாராயண கவுடா, முன்னாள் எம்எல்ஏ பி.பிரகாஷ், டிஏபிசிஎம்எஸ் தலைவர் பி.எல்.தேவராஜு, காங்கிரஸ் தலைவர் புக்கனகெரே விஜய ராமகவுடா, தொகுதி காங்கிரஸ் தலைவர் பி.நாகேந்திர குமார், ஜேடிஎஸ் தலைவர் அக்கிஹெப்பலு ரகு, யுவ ஜனதா தளம் மாநில பொதுச் செயலாளர் குருபஹள்ளி நாகேஷ் உள்ளிட்ட பலர் பவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா மாரடைப்பால் பாங்காக்கில் காலமானார். விஜய் கன்னடத் திரையுலகில் பரவலாகப் பணியாற்றியவர் மற்றும் திரைப்படக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் உறவினர் ஆவார். பெங்களூரைச் சேர்ந்த ஸ்பந்தனா காவல்துறை அதிகாரியின் மகள், காவல் உதவி ஆணையர் பி.கே. சிவராம். 2007ல் விஜய் ராகவேந்திராவை திருமணம் செய்து கொண்டார்.