‘என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே...’ திருத்தனி முருகனுக்கு மொட்டை அடித்து அலகு குத்திய நடிகை!

 

நடிகை சரண்யா மொட்டை தலையுடன் திருத்தணி முருகனுக்கு பூஜை செய்து, நாக்கில் அலகு குத்தி மனம் உருகி நேர்த்திக்கடனை நிறைவேற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2004-ல் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான படம் ‘காதல்’. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த சந்தியாவின் தோழியாக நடித்தவர் சரண்யா நாக். இதனைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பேராண்மை’ படத்தில் 5 பெண்களில் ஒருவராக சரண்யா நடித்துள்ளார்.

மேலும், இவர் துள்ளுற வயசு, ஒரு வார்த்தை பேசு ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார். தற்போது இவர் நடிப்பை விட்டுவிட்டு எடிட்டிங் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இந்த நிலையில் சரண்யா, திருத்தணி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்தி உள்ளார். அதனுடன், முருகனுக்கு பூஜை செய்து, நாக்கில் அலகு குத்தி இருக்கிறார். 

இது குறித்தான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சரண்யா, “என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே... அவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே” என பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.