தன் மீது கண்ணயர்ந்து உறங்கிய மகன்.. முத்தமிட்டு மகிழ்ந்த நடிகை நயன்தாரா.. வைரல் வீடியோ!

 

தன் மீது கண்ணயர்ந்து உறங்கிய தனது மகனை நடிகை நயன்தாரா முத்தமிட்டு மகிழ்ந்து நெகிழ்ந்த வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த 2005-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர், சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் நடித்தார். பின்னர், விஜய், சூர்யா, அஜித், விஷால், சிம்பு, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.

சுமார் 6 வருடங்களுக்கு மேலாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவீட்டு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் முதலில் திருப்பதியில் நடைபெற திட்டமிட்ட நிலையில், பின்னர் இவர்கள் தங்கள் திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு வழங்கியதால், மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு மாற்றப்பட்டது.

திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்த நயன்தாரா,  தற்போது தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது தன்னுடைய குழந்தை மற்றும் கணவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.