அவர் என்னை ஏமாற்றிவிட்டார்.. பிரபல கவர்ச்சி நடிகை பரபரப்பு பேட்டி

 

திருமணத்துக்கு முன்பு ஒருவரை காதலித்தேன், அவர் என்னை ஏமாற்றி விட்டார் என்று நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார்.

திரைத்துறையில் கால்பதிக்க பல போராட்டங்களையும் இன்னல்களையும் சந்தித்தபோதிலும் தற்போது அசைக்கமுடியாத பிரபல நடிகையாக வளம் வருபவர் சன்னி லியோன். இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களிலும் கால் பதித்து வருகிறார். இந்தியில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்த சன்னி லியோன்,  தமிழில் ‘வடகறி’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் நடனமாடி தமிழ் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து, ‘ஓ மை கோஸ்ட்’ படம் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சன்னியின் என்ட்ரி மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் பிஸியாக இருக்கும் சன்னி லியோன் தற்போது தொழிலதிபராக அவதாரத்தை எடுத்துள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் அட்டகாசமான பார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட நட்சத்திர ஹோட்டல் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த ஹோட்டலுக்கு ‘சிக்கா லோகா’என்று பெயர் வைத்துள்ளார். விரைவில் இந்தியா முழுவதும் இதன் கிளைகளை தொடங்கவும் சன்னி லியோன் திட்டமிட்டுள்ளாராம்.

இந்த நிலையில், தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து சன்னி லியோன் அளித்துள்ள பேட்டியில், “என் திருமணத்துக்கு முன்பு ஒருவரை காதலித்தேன். இருவரும் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டோம். ஹவாய் தீவில் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்தோம். இதற்காக ஓட்டல் அறைகள் என்று அனைத்தையும் புக் செய்து பணமும் கட்டிவிட்டேன். ஆனால் என்னை அவர் ஏமாற்றிவிட்டார், ஒரு நாள் உன்னை நான் காதலிக்கவில்லை.

உன்மீது இருந்த காதல் எப்போதோ போய்விட்டது என்றார். அதை கேட்டு என் காலடியில் பூமி நகர்வதுபோல் இருந்தது. இரண்டு மாதத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்து இருந்தபோது இப்படி அவர் பேசியது மனதை மிகவும் பாதித்தது. அதன்பிறகு கடவுள் டேனியல் வெபரை அறிமுகம் செய்தார். எங்களின் இரண்டு மனங்களும் இணைந்ததால் திருமணம் செய்து கொண்டோம்” என்றார்.