திருநங்கையாக மாறிய ஜிபி முத்து.. என்ன காரணம்? வைரலாகும் புகைப்படம்!

 

பிக் பாஸ் மூலம் பிரபலமாகிய ஜி.பி.முத்து திருநங்கையாக மாறி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டிக் டாக் மூலம் புகழ் பெற்றவர் ஜி.பி.முத்து. இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு யூ-டியூப் பக்கம் ஒன்றை தொடங்கினார். குறைந்த காலகட்டத்திலேயே இவரது பக்கத்தை மிக அதிகமானோர் பின் தொடர்ந்தனர். இதுவரை ஏறக்குறைய 9 லட்சத்துக்கு அதிகமானோர் ஜி.பி.முத்துவை பின் தொடர்கின்றனர். இவர் குறித்த மீம்ஸ்களும், வீடியோக்களும் தினமும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகும்.

குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்த ஜி.பி.முத்துவுக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்து பணம், புகழ் கிடைக்கும் போதும் தனது பழசை மறக்காமல், இன்னமும் தன்னுடைய வெகுளித்தனத்துடன் இருப்பது தான் இவரது பலமாக கருதப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6ல், முதல் போட்டியாளராக வீட்டுக்குள் அடியெடுத்து அட்ராசிட்டி செய்தார். ஆதம் யார் என அவருக்கும் கமலுக்கும் நடந்த உரையாடல்கள் இப்போதும் மீம் கண்டெண்ட்டாக வலம் வருகிறது. ஆனால், சில நாட்களிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து, சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டிவிட்டு மீண்டும் ட்ரெண்டிங் ஆனார்.

தற்போது ஜி.பி.முத்து ‘ஆர்வன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜி.பி.முத்து திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரை ஜி.பி.முத்து தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.