நடிகர் கிச்சா சுதீப்பை இயக்கும் சேரன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குநர் சேரன் இயக்கும் புதிய படத்தின் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1997-ல் வெளியான ‘பாரதி கண்ணம்மா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் சேரன். தொடர்ந்து பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, பாணவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் 2002-ல் வெளியான ‘சொல்ல மறந்த கதை’ படத்தின் மூலம் கதைநாயகனாகவும் அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் நடித்துள்ளார்.

சேரன் கடைசியாக 2019-ம் ஆண்டு வெளியான ‘திருமணம்’ படத்தை இயக்கியிருந்தார். அவரே நடித்தும் இருந்த இப்படத்தில் தம்பிராமையா, சுகன்யா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக அவர் எந்தப் படத்தையும் இயக்கவில்லை.

இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரபரப்பாக பேசப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.