பிரபல நடிகர் மீது வழக்கு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 

தலித் சமூகத்தை பற்றி அவதூறாகவும், இழிவுப்படுத்தும் வகையிலும் பேசிய நடிகர் உபேந்திரா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வருபவர் உபேந்திரா. இவர் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘சத்யம்’ படத்தின் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானார். இவர் ‘உத்தம பிரஜாக்கிய’ என்ற பெயரில் கட்சி நடத்துகிறார். இவர் தனது கட்சி தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் நேரலையில் பேசினார்.

அதில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் தொடர்பாக பேசினார். அப்போது தலித் சமூகத்தை பற்றி அவதூறாகவும், இழிவுப்படுத்தும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நடிகர் உபேந்திரா மீது உடனடியாக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகரின் பல பகுதிகளில் சாலைகளில் டயர்களை எரித்து போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக பெங்களூரு சி.கே.அச்சுகட்டு போலீசில் நடிகர் உபேந்திரா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் உபேந்திரா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதே பல பகுதிகளில் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.