நடிகை சுனைனா மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 

நடிகை சுனைனா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை பூர்வீகமாக கொண்டவர் நடிகை சுனைனா. இவர், 2006-ல் வெளியான ‘சம்திங் ஸ்பெசல்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், தமிழில் 2008-ல் நகுல் நடிப்பில் வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து 'மாசிலாமணி', 'யாதுமாகி', 'வம்சம்', 'நீர்ப்பறவை', 'சமர்', 'வன்மம்', 'தெறி', 'சில்லு கருப்பட்டி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

நடிகை சுனைனா, தற்போது சில வெப் தொடர்களிலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஹீரோயினை மட்டுமே முக்கிய கதாப்பாத்திரமாக எடுக்கப்பட்ட ‘ரெஜினா’ படம் வெளியானது. க்ரைம் - த்ரில்லர் பாணியில் வெளியாகியிருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் ஓரளிற்கு வரவேற்பினை பெற்றது. இதையடுத்து சுனைனா சில படங்களில் கமிட் ஆகியுள்ளார். 

இந்த நிலையில் நடிகை சுனேனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், அவருக்கு ட்ரிப்ஸ் ஏற்றுவதற்கான டியூப்பும், மூக்கில் ஆக்ஸிஜன் செலுத்துவதற்கான டியூப்பும் இணைக்கப்பட்டுள்ளது. எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலை சுனைனா வெளியிடவில்லை. நடிகை சுனைனா நலம் பெற வேண்டி ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.