நடிகர் அசோக் செல்வனுக்கு திருமணம்.. பொண்ணு யாரு தெரியுமா?

 

நடிகர் அசோக் செல்வன் அடுத்த மாதம் பிரபல நடிகரின் மகள் ஒருவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2013-ல் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் அசோக் செல்வன். வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் இவருக்கு ‘ஓ மை கடவுளே’ திருப்புமுனை படமாக அமைந்து. இதனை தொடர்ந்து பீட்சா 2, தெகிடி, சவாலே சமாளி, மன்மத லீலை, ஹாஸ்டல்,சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘போர் தொழில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சரத்குமார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விமர்சனரீதியாக மட்டுமல்லாமல் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகர் அசோக் செல்வன் பிரபல நடிகையை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அசோக் செல்வன், நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து வருவதாகவும் இவர்கள் திருமணம் செப்டம்பர் 13-ம் தேதி நெல்லையில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட இருப்பதாகவும் பின்னர் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டதாக தெரிகிறது. நடிகர் அருண் பாண்டியனுக்கு கவிதா, கிரானா, கீர்த்தி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். ஏற்கனவே இவரின் இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. நடிகை கீர்த்தி பாண்டியன் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

இவரும் நடிகர் அருண் பாண்டியனும் இணைந்து ‘அன்பிற்கினியாள்’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஒரு நேர்காணலில் அசோக் செல்வன் வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் என் குணத்திற்கு செட்டாகாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.