பிரபல நடிகருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் திரையுலகினர்!

 

பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1973-ம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் நடிகர் சரத்பாபு. அதன்பின், 1977-ல் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘பட்டினப்பிரவேசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து, ‘நிழல் நிஜமாகிறது’, ’முள்ளும் மலரும்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘நெற்றிக்கண்’, ‘47 நாட்கள்’, ‘சட்டம்’, ‘மனக்கணக்கு’, ‘வேலைக்காரன்’, ‘முத்து’, ‘அண்ணாமலை’, ‘ஆளவந்தான்’, ‘மாசாணி’ உள்பட ஏராளமான படங்களில் அவர் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் சரத்பாபு நடித்து பன்முகக்கலைஞனாக திகழ்ந்தார். முதலில் கதாநாயகனாக அறிமுகமான சரத்பாபு, பின்னர் குணச்சித்திர நடிப்பால் தனக்கென்று தனி இடம் பிடித்துக் கொண்டார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.

வயது முதிர்வு காரணமாக திரையுலகில் இருந்து விலகி, ஐதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் முழு ஓய்வில் இருக்கும் இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.