2 தேசிய விருது வாங்கிய பிரபல சினிமா தயாரிப்பாளர் மரணம்.. திரையுலகை உலுக்கிய சோகம்!!

 

பிரபல தயாரிப்பாளர் பி.வி.கங்காதரன் வயது மூப்புக் கராணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 80.

1977-ல் வெளியான ‘சுஜாதா’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் தொழிலதிபர் பி.வி.கங்காதரன். தொடர்ந்து, கிரஹலட்சுமி புரொடக்‌ஷன்ஸ் என்கிற பெயரில் இருபதுக்கும் மேற்பட்ட பல மலையாள படங்களை தயாரித்துள்ளார். 'ஒரு வடக்கன் வீரகதா', 'அசுவிண்டே அம்மா', 'தூவல் கொட்டாரம்' மற்றும் போன்ற படங்கள் இவர் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தயாரிப்பாளராக அவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளையும், ஐந்து கேரள மாநில விருதுகளையும் வென்றுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2011-ல் கோழிக்கோடு வடக்கு தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு போட்டியிட்டார். மேலும் மாத்ருபூமியின் இயக்குநராகவும் சில வருடங்கள் இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், இவரின் உடல்நிலை மிகவும் மோசமானதால் ஒரு வாரத்துக்கும் மேலாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனிக்காமல் இன்று காலை 6 மணியளவில் காலமானார். 

தயாரிப்பாளர் பி.வி.கங்காதரனின் மரணம், தற்போது மலையாள திரையுலகை சேர்ந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பலர் இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு, இவரின் குடும்பத்தினருக்கு தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.