அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா!

இந்தியா முழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருகிறது. அமைச்சர்கள், பிரபலங்கள் என பாரபட்சம் இல்லாமல் அனைவரும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மும்பையின் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தில் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் அவரது மகனும் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா பச்சன், ஜெயா பச்சன், ஆராத்யாவிற்கு கொரோனா
 

அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா!இந்தியா முழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருகிறது. அமைச்சர்கள், பிரபலங்கள் என பாரபட்சம் இல்லாமல் அனைவரும்  கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மும்பையின் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தில் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதில் அவரது மகனும் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா பச்சன், ஜெயா பச்சன், ஆராத்யாவிற்கு கொரோனா நெகட்டிவ் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது குடும்பத்தினரும், ஊழியர்களும் பரிசோதனை செய்து கொண்டுள்ளனர்.  10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவு செய்து பரிசோதனை செய்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தமது ட்விட்டர் பதிவில் அமிதாப் குறிப்பிட்டுள்ளார்.

A1TamilNews.com

From around the web