பாலியல் பலாத்காரம்.. 19 வயது அமெரிக்க இந்தியன் மாணவி படுகொலை…

19 வயது அமெரிக்க இந்தியன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சிகாகோவில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் இலனாய்ஸ் பல்கலைக் கழகத்தில் Kinesiology துறையில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார் ரூத் ஜார்ஜ் என்ற மாணவி. ஐதராபாத்தைச் சார்ந்த இவர் குடும்பத்தாருடன் அங்கே வசித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் அவருடைய செல்ஃபோன், பல்கலைக் கழக வளாகத்திற்குள்
 

பாலியல் பலாத்காரம்.. 19 வயது அமெரிக்க இந்தியன் மாணவி படுகொலை…19 வயது அமெரிக்க இந்தியன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சிகாகோவில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் இலனாய்ஸ் பல்கலைக் கழகத்தில் Kinesiology துறையில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார் ரூத் ஜார்ஜ் என்ற மாணவி.

ஐதராபாத்தைச் சார்ந்த இவர் குடும்பத்தாருடன் அங்கே வசித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் அவருடைய செல்ஃபோன், பல்கலைக் கழக வளாகத்திற்குள்  Halsted தெருவில் உள்ள பார்க்கிங் கராஜில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் சென்று பார்க்கும் போது அவருடய குடும்பத்திற்குச் சொந்தமான காரின் பின் சீட்டில் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.

பார்க்கிங் கராஜுக்கு வந்து சென்றவர்களை கண்காணிப்பு காமிரா பதிவு மூலம் ஆராய்ந்த போது, அதிகாலை 1:30 மணிக்கு ரூத் ஜார்ஜ் அங்கு காரை எடுப்பதற்காக வந்துள்ளார். அவருக்குப் பின்னாலேயே கொலையாளி வந்துள்ளான். 2.10 மணிக்கு கொலையாளி மட்டும் வெளியே சென்றது பதிவாகி இருந்தது.

ஆய்வில் ரூத் ஜார்ஜ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதும், மூச்சுத் திணறி இறந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. வீடியோ பதிவின் மூலம் கொலையாளி அடையாளம் காணப்பட்டான். அவன் வழக்கமாகச் செல்லும் மெட்ரோ ரயில் நிலையத்தில் போலீசார் மடக்கிப் பிடித்தனர். 26 வயது டொனால்ட் துர்மன் என்ற அந்த கொலையாளி மீது ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் உள்ளன.

பாலியல் பலாத்காரம்.. 19 வயது அமெரிக்க இந்தியன் மாணவி படுகொலை…

மாணவி ரூத் ஜார்ஜ் படுகொலை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூத் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் குழுமிய நண்பர்கள், வகுப்புத் தோழர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். யுனிசர்சிட்டி ஆஃப் இலனாஸ் பல்கலைக் கழக வளாகத்தில், ரூத்திற்குப் பிடித்தமான மஞ்சள் நிற ரிப்பன்கள் தொங்க விடப்பட்டுள்ளன.

A1TamilNews.com

From around the web