மாற்றுத் திறனாளிகள் பணிக்கு வரத் தேவையில்லை! தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மார்ச் மாதம் முதல் அறிவிக்கப்பட்டு வரும் தொடர் ஊரடங்கு காரணமாக பேருந்துகள், ரயில் சேவைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் பணிக்கு வரத் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 31 வரை அமுலில் இருக்கும் எனவும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மார்ச் 24 முதல் ஜூலை 31 வரை விலக்கு
Aug 13, 2020, 19:30 IST
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மார்ச் மாதம் முதல் அறிவிக்கப்பட்டு வரும் தொடர் ஊரடங்கு காரணமாக பேருந்துகள், ரயில் சேவைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் பணிக்கு வரத் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 31 வரை அமுலில் இருக்கும் எனவும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மார்ச் 24 முதல் ஜூலை 31 வரை விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.